tamilnadu

குழந்தை திருமணம்: கோவையில் 5 பேர் கைது

கோவை, மார்ச் 2-  கோவையில் 18 வயது பூர்த்தி ஆகாத சிறுமியை திருமணம் செய்த வியாபாரி மற்றும் காதலித்து கடத்தி சென்ற வாலிபர் ஆகியோரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோவை என்.எச்.ரோடு திருமால் வீதியை சேர்ந்த வர் முகமது நிசார் (28). செருப்பு கடை வியாபாரி. இவ ருக்கும் பெங்களூரை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர் சம்மதத்தின் பேரில் இந்த திருமணம் போத்தனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் முகமது நிசார் கடந்த வாரம் வெரைட்டி ஹால் ரோடு கவல் நிலையத்தில் தனது மனைவி காணாமல் போய் விட்டதாக புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே  பகுதியில் கட்டட வேலை செய்து வந்த மணப்பாறை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) என்பவர் முகமது நிசாரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய் தது தெரியவந்தது. இதனிடையே, ரஞ்சித்குமாரிடமிருந்து முகமது நிசாரின் மனைவியை மீட்ட காவல் துறையினர் மேற் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் முகமது நிசா ரின் மனைவிக்கு 16 வயது மட்டுமே ஆகியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை திருமணம் செய்த முகமது நிசார், ரஞ்சித் குமார் ஆகியோரை சிறார் பாலியல் பலாத்கார வழக்கில் (போக்சோ சட்டம்) காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும், திருமணம் செய்து வைத்த முகமது நிசாரின் தந்தை அப்துல் கலாம்(50), தாய் பர்சானா(48), இளம் பெண்ணின் தாய் கம்மர்தாஜ்(40) ஆகியோர் மீதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர்.