tamilnadu

img

தானாக மாறாது போராடினால் தான் மாற்றம் காண முடியம்

தருமபுரி, ஆக.11- தானாக மாறது போராடினால் தான் மாற்றம் கானமுடியம் என தரு மபுரி நடைபெற்ற கருத்தரங்கில் கவி ஞர் நா.முத்துநிலவன் பேசினார். தமிழ்நாடு அரசு  கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 14 வது மாநில பிரதிநிதித்துவப் பேரவை ஆகஸ்ட் 10,11 ஆகிய தேதிகளில் தருமபுரி டி.என்.சி மாஹாலில்  நடைபெற்றது. இப்பேரவையின் ஒருபகுதியாக கருத் தரங்கம் நடைபெற்றது.  இக்கருத்தரங் கத்திற்கு முன்னாள் மாநில பொரு ளாளர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.சி.குமார் வரவேற்றார். “தானாய் எல் லாம் மாறும் என்பது பழைய பொய் யடா “ என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துநிலவன் பேசினர். அப்போது அவர் பேசுகையில்,  சண்டை ,முரண்பாடு, தலைவர் தொண் டர், கணவன், மனைவி, நண்பர்கள் ஆகிய எல்லா மட்டங்களில் வரும் சண்டை என்பது சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் அளவுக்கு இருக்க வேண்டும் என அக்காலத்திலேயே திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். சிறு சண்டைகள் வந்தால் கருத் தொற்றுமை வரும் பிணைப்பு வரும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் சொல்லித்தாராத பாடத்தை சங்கம் கற்றுத்தரும், சங்கம், சங்க தலைவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தபாடம், சொந்த வாழ்க்கையை மேம்படுத்தும், சங்கம் என்பது சமூக வாழ்க்கை, வாழ்க்கைக்கான கல்வியை பள்ளி,  கல்லூரிகளில் கற்றுத் தரமாட்டார்கள், நன்பர்கள் கற்றுத் தருவார்கள்,  இந்த  சமூகத்தில் பெண் படித்தால் சமூகத் திற்கே பெருமை. பல நூற்றாண்டுகளுக்கு முன் காரல் மார்க்ஸ், பகத்சிங், சேகுவேரா, நெல்சன் மண்டேலா இவர்கள் எல்லாம் சமூகத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால் நம் சொந்த தாத்தாவுக்கு தாத்தா பெயர்  நமக்கு தெரியாது. ஆனால் தலைவர்கள் சமூ கத்திற்காக வாழ்ந்தவர்கள். அதனால் தான சமூகத்தில் இவர்கள் இன்னும் வாழ்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டு கள் ஒரே மாதிரியாகத்தான் விலங்கு கள் இருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் நொடிக்குநொடி மாறிக்கொண்டே இருக்கிறான். இதற்கு காரணம் உழைப்பு, படிப்பு என தெரிவித்தார். இந்திய நாடு 1947 ஆம் ஆண்டு  சுதந்திரம் பெற்றது. செங்கோட்டை யில் முதல் சுதந்திரதின கொடியை  யார் ஏற்றியது குறித்து வரலாற்றில்  இல்லை. காந்தி கொடியேற்றவில்லை,  நேரு தான் கொடியேற்றினார். அப் போது காந்தி அந்த இடத்தில் இல்லை. கொல்கத்தாவில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் விரதம் இருந்தார். அப்போது, நான் இப்படிப்பட்ட சுதந்தரத்தை விரும்பவில்லை என காந்தி வானொலி நிலைய பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார். இப்படி பேசியதற்கு காரணம் என்னவென்று தெரிந்தால் இன்றைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மேலும், 1990 ஆம் ஆண்டு தனி யார்மயம் தாராளமயம், உலகமயத்தை கொண்டு வந்தனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறோம். மத்திய பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை நம் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும். வட இந்தியாவில் கல்வி அறிவுகுறைவு, தமிழகத்தில் ஓர் அளவு கல்வி அறிவுபெற்றதற்கு காரணம், காமராசர் கல்வியை கொடுத்தார், பெரியார் கல்விகற்கவேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார். 1986 ஆம் ஆண்டில் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது அந்த கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 404 பேர் இருந்தனர். அப்போது பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதனை தடுக்க எல்ஐசி சங்கம் மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு தனி யார் மயத்தை முறியடித்தனர். எது வும் தானாக மாறது போராட்டத்தின் மூலமே மாற்ற முடியும். பெண்கள் வெளியில் வந்தால் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் சமூ கத்தில் உள்ளது. பெண்கள் பற்றிய  பார்வை மாறவேண்டும். குழந்தை பரு வத்திலேயே ஆண், பெண் பாகுபாடு பார்க்கும் சூழல் உள்ளது. இதை மாற்ற வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.  முன்னதாக, இக்கருத்தரங்கில்  புதுகை பூபாளம் நையாண்டி தர்பார் பல்சுவை கலைநிகழ்ச்சி  நடைபெற் றது. முடிவில் மாவட்ட இணைசெயலா ளர் எல்.விஜியகுமார் நன்றி கூறினார்.