மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம்
உடுமலை, அக்.2- உடுமலை கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, புதனன்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. அக்.2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினமாகும். இதையொட்டி, உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகத்தில் (எண் இரண்டு) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் புதனன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் இ. இளமுருகு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின விழா நூலகத்தில் கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் தேசத் தலை வர்கள் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள நூலகம் உதவுவதாக தெரிவித்தார். நூலகர் வீ. கணேசன் வரவேற்றார். இதில் நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.கே.சிவக்குமார் முன்னிலை வகித்தார். நூலக வாசகர் வட்ட ஆலோசகர் செல்வி கேஸ் எம்.பி.அய்யப்பன் காந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோர் காந்தியின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடுமலை யு.கே.பி.எம்., பள்ளி மாணவர் வீ.ஆதவன், காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்தும், காமராஜர் கல்வித்திட்டம் குறித்தும் உரையாற்றினார். இதையடுத்து ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப் பட்டது. நிறைவாக நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்