தமிழக பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரக்கோரி முழக்கம்
கோவை, பிப். 14 - மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கி வரும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூ ரியை தமிழக பல்கலைகழகத்தின் கீழ் கொண்டு வரக்கோரி, வெள்ளியன்று மாண வர்கள் திடீரென உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை, அவினாசி சாலையில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் இல்லாமலும், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. இந்நிலையில், இக்கல்லூ ரியை தமிழ்நாட்டின் சியுடிஎன் எனப்படும் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதன்படி தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் கல்லூரிக் கொண்டு வரப்படுமென அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இது நடைமுறை படுத் தாமல் இருந்து வந்த நிலையில் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை முன்னி றுத்தி வெள்ளியன்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் மாணவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலை யில், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக உறுதிபட தெரிவித்து கல்லூரி வளா கத்தில் அமர்ந்து உள்ளிரிப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.