கோவை, பிப். 16- ஆடம்பரமாய் செலவு செய்யும் மத்திய ஆட்சியா ளர்கள் குறைந்தபட்ச ஊதி யமாய் தொழிலாளிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 500யை நிர் ணயிக்க துடிப்பது அகம்பா வத்தின் உச்சம் என பி.ஆர்.நடராஜன் எம்.பி, குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கை மாநாடு கோவை மசக்காளிபாளை யம் ஹர்சா மஹாலில் ஞாயி றன்று நடைபெற்றது. இம் மாநாட்டில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசு கையில், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயி ரம் வழங்க வேண்டும் என்று முதன்முதலில் சிஐடியு அகில இந்திய பொதுக்குழு வில் தீர்மானம் இயற்றப் பட்டது. இதனையேற்று முதன்முதலில் அதனை சட்டமாக நிறைவேற்றியது இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள கேரள மாநிலமாகும். இதனைத்தொடர்ந்து தில்லி மாநிலம் இச்சட்டத்தை நிறைவேற்றியது. தற்போது மத்திய நிதிமைச்சர் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.4ஆயிரத்து 500 ஆக நிர்ணயிப்போம் என்கிறார். ஆடம்பரத்திலேயே வாழ்க் கையை நடத்தும் இவர்கள் ஒரு நாளைக்கு ரூ. 4 ஆயி ரத்து 500யை செலவு செய்கி றார்கள். ஆனால், தொழிலா ளிக்கு மாதம் ரூ.4 ஆயிரத்து 500யை நிர்ணயிப்போம் என்று சொல்வது அகம்ப வத்தின் உச்சம். இதனை எதிர்த்து நாடாளுமன்றத் தில் வலுவான எதிர்ப்பு குரல் எழுந்தபிறகு இப்போது அது நிலைக்குழுவின் ஆலோசனைக்கு சென்றுள் ளது. இதற்கெதிரான வலு வான போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டிய அவசியம் எழுந் துள்ளது. மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிரிக் கக்கூடாது என நமது முன் னோர்கள் அரசியல் சட் டத்தை உருவாக்கி வைத்தி ருக்கிறார்கள். ஆனால், மக்களை மதரீதியாக பிரித்து மக்கள் ஒற்று மையை சீர்குலைக்க நினைக்கிறார்கள். அது நிறைவேறாது என்றார். மேலும், இரண்டு ரூபாய் கூலி உயர்வுக்காக சுமைப் பணி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து போரா டுகிறீர்கள். ஆனால் சிறு கச்சிறுக உழைத்து சேர்த்த பணத்தை உங்கள் குழந்தை களை எல்கேஜி, யுகேஜியில் சேர்க்கும்போதே மொத்தத் தையும் தனியார் கல்வி நிறுவனங்கள் பறித்து விடு கின்றன என குறை கூறி னார்.