tamilnadu

img

கனமழை எதிர்ரொலி மலைரயில் பாதையில் மத்திய ரயில்வே குழு ஆய்வு

ஈரோடு, ஆக.10- பழைய பென்சன் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என வலியு றுத்தி  மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) ஈரோடு கிளையின் 27 ஆவது மாநாடு ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.ஆர்.சண்முகம் சங்கத்தின் கொடியினை ஏற்றிவைத்தார். துணைத் தலைவர் கே.ஜெயக்குமார் வர வேற்றார். பெருந்துறை கோட்ட செயலாளர் பி.கந்தசாமி அஞ்சலி தீர்மானத்தை  வாசித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை செயலாளர் எஸ்.உமாநாத் சிறப்புரையாற்றினார். செயலாளர் சி.ஜோதிமணி அறிக்கையை முன்மொழிந்தார். பொருளாளர் கே.விஸ் வநாதன்,  ஈரோடு நகர கோட்டத்தின் செய லாளர் டி.குமார் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

தீர்மானங்கள்

இம்மாநாட்டில் பழைய பென்சன் திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  1.12.2019  ஆம் தேதியன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். கணக்கீட்டுப் பிரிவு, கணக்குப் பிரிவு, நிர்வாக பிரிவில் வேலைப்பழுவிற்க ஏற்ப  பணியாளர்களை நியமனம் செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டும். 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஒப்பந்தத்திற்கு முரணாக மின் பாதை நீட்டிப்பு பணிகளில் நிரந்தர பணி யாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க வேண்டும். களப்பணிக்கு தேவையான கரு விகளையும், பியூஸ் வயர் உள்ளிட்டவற்றை தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இதனையடுத்து, சங்கத்தின் ஈரோடு கிளை தலைவராக சி.ஜோதிமணி, செய லாளராக கே.விஸ்வநாதன், பொருளாள ராக பி.ஸ்ரீதேவி ஆகியோர் புதிய நிர்வா கிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.