tamilnadu

img

புலிக்கரை ஊராட்சியில் ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து மத்திய குழு ஆய்வு

தருமபுரி, ஆக. 28- புலிக்கரை ஊராட்சியில் ஜல் சக்தி அபியான் திட்டம் தொடர்பாக மத்திய குழு ஆய்வு மேற்கொண்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், புலிக்கரை  ஊராட்சியில் ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து சுக்லா  தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வுமேற்கொண்ட னர்.  இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் மண்டல  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாக்ரடீஸ், உதவி பொறியாளர் சுமதி மற்றும் ஊராட்சி செயலர் ஆகி யோர் கலந்துகொண்டனர்.  இந்த ஆய்வில் மழைநீர் சேகரிப்பு குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும், மரங்கள் வளப்பது குறித்தும் விழிப் புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து மரம் நட்டு பராமரிப்பதையும் பார்வையிட்டனர். மேலும் புலிக்கரை அரசு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு, நீர்மேலான்மை குறித்து உறுதிமொழி ஏற்ப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

;