tamilnadu

கோவை மத்திய சிறையில் செல்போன்கள் பறிமுதல்

கோவை, செப். 26- கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதி, விசாரணை கைதி,  குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாது காப்பு, வெடிகுண்டு வழக்கில் கைதான கைதி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட் டுள்ளனர். இங்கு பீடி, சிகரெட், குட்கா,  கஞ்சா போன்ற போதை பொருட்கள் மற்றும் செல்போன்கள் தடை செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வப் போது நடைபெறும் ஆய்வின்போது செல்போன்கள் சிக்குவது தொடர்கி றது. சிறைத்துறையினரின் உதவியில் லாமல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் வருவது சாத்தியமற்றது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் புதனன்று கோவை மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு உள்ள பத்தாவது பிளாக்கில் சட்ட விரோ தமாக பயன்படுத்தப்பட்டு வந்த 7 செல் போன்கள் சிறை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செல்போன் வைத்திருந்த கைதிகளிடம் யார் மூலம் சிறைக்குள் செல்போன் கொண்டுவரப்பட்டது என் பது குறித்து விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதேபோல் சிறை யில் ஜாமர் இருக்கும் பொழுது கைதி கள் எப்படி ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி யும் எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்த விசாரணை யின் முடிவில் சம்மந்தப்பட்ட கைதி கள் மீதும், செல்போனை சட்டவிரோத மாக உள்ளே கொண்டுவர உதவிய வர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.