tamilnadu

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை

பொள்ளாச்சி, மே 25பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சட்டப்பட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த மாதம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பொள்ளாச்சி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில் வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை கொண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியது என இரண்டு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீதும் தனித்தனியாக கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

;