tamilnadu

img

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்திடுக

கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஜன.31- மாநில அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திடக்கோரி,  மாணவர்க ளின் கல்வி உரிமைக்கான கூட்டமைப் பினர் பொள்ளாச்சி திருவள்ளுவர் திட லில் வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் 5  மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வினை தமி ழக அரசு இந்தாண்டு நடத்த திட்டமிட் டதைக் கண்டித்தும், அதனை உடன டியாக ரத்து செய்திடக்கோரியும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதை  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர்  கே.மகா லிங்கம் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில  வெளியீட்டு செயலாளர் இரா.மனோக ரன் வரவேற்று பேசினார். விசிக  மாவட்ட செயலாளர் ச.பிரபு, திமுக  ந.கண்ணுசாமி, மதிமுக நகர செயலா ளர் துரைபாய், மஜக மாவட்ட பொரு ளாளர் முஸ்தபா,தமுமுக கபூர், முத்து பாய், மமக மாவட்ட பொருளாளர்  ஷேக் அப்துல்லா, சிபிஐ வட்டார செயலாளர் சுப்ரமணியம், ஆதித்த மிழர் பேரவை கோபால் உள்ளிட் டோர் பங்கேற்று கண்டன உரையாற் றினர் . இதில் அரசுப்பள்ளி மற்றும் தனி யார் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் திரளானோர் கலந்துக் கொண்டனர்.

;