மத்திய. மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிஐடியு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் ஆர்.கேசவமணி, வி.பெருமாள், சி.துரைசாமி, என்.சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.