கோவை, நவ. 5- ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனை வரையும் வேலை நீக்கம் செய்வதை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர், ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் ஓய்வூ தியர் சங்கத்தினர் ஆகியோர் வியாழ னன்று கோவை பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி யாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழி லாளர்களையும் வேலைநீக்கம் செய்யும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும். சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். பிஎஸ்என்எல் சேவையை துண்டித்து தனியாருக்குத் துணை போகும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் சங்கம், ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் சங்கத்தின் கிளைத் தலைவர் சரவண குமார் தலைமை வகித்தார். இதில், ஓய்வூதியர் சங்கத் தின் அகில இந்திய நிர்வாகி பங்கஜவல்லி, ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் மகேஸ்வ ரன், நிர்வாகிகள் சசி குமரன், ஜாரோஸ் பாலசண்முகம், லாரன்ஸ், ராஜேந் திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.