சேலம், செப்.27- சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி சேலத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங் கப்படவில்லை. இதற்கிடையே, மத்திய பாஜக அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திலுள்ள 50 சதவிகித ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என திடீரென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கண்டித்தும், உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழு வதும் சுமார் 5 ஆயிரம் ஒப்பந்த தொழி லாளர்கள் 3 நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் தொலை பேசி நிலையம் முன்பு வெள்ளியன்று வேலை நிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் குமார சாமி தலைமை வகித்தார். கிளை செய லாளர்கள் அருள்மணி, வேல்விஜய் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஹரிஹரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிறைவாக கிளை நிர்வாகி நாசர் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த தொழிலா ளர்கள் திரளானோர் கலந்து கொண் டனர்.