tamilnadu

img

ஏழைகளுக்கு எதிரான மத்திய அரசு நன்றி அறிவிப்பு பயணத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., குற்றச்சாட்டு

கோவை, செப்.24 –  ஏழை மக்களின் நலனை சிறிதும் மதிக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் அரசாகவே பாஜக தலைமையிலான மத்திய அரசு திகழ் வதாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.  அண்மையில் நடைபெற்ற நாடா ளுமன்ற தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடா ளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டி யிட்ட பி.ஆர்.நடராஜன் பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன்ஒருபகுதியாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் மேற்கொண் டார்.  சிங்காநல்லூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட காய்கடையில் திங்க ளன்று துவங்கிய பிரச்சார இயக் கத்தை திமுக மாநகர் பொறுப்பு செயலாளரும், சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான நா.கார்த் திக் துவக்கி வைத்தார். இப்பிரச் சார இயக்கம் பழையூர், உடையாம் பாளையம், சௌரிபாளையம், மசக்காளிபாளையம், தண்ணீர்ப்பந் தல். பீளமேடு, ஆவரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு சித்தாபுதூர் பகுதியில் நிறைவடைந்தது. இதில் திமுக பகுதி கழக செயலாளர் கோவிந்தராஜன், காங்கிரஸ் கட்சி யின் நிர்வாகி கணபதி சிவக்குமார், மதிமுக நிர்வாகி ஆடிட்டர் அர்ஜுன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், சிங்கை நகரச் செய லாளர் வி.தெய்வேந்திரன், பீளமேடு நகரச் செயலாளர் கே.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி.கலையர சன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் தனபால் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.  இதைத்தொடர்ந்து செவ்வாயன்று சூலூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பாப்பம்பட்டி பிரிவில் துவங்கிய பிரச் சார பயணம் பள்ளபாளையம், கண்ணம்பாளையம், பீடம்பள்ளி, பட்டணம், இருகூர், ராசிபாளையம், செங்கத்துறை, கலங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு  சூலூர் பகுதியில் பிரச்சாரம் நிறை வடைந்தது. இந்த பிரச்சார இயக் கத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எம்.சி.மனோகரன், இருகூர் சுப்பிரமணியம், திமுக நிர்வாகி தளபதி முருகேசன், மதிமுக செயலாளர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மௌனசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, சூலூர் தாலுகா செயலாளர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  முன்னதாக, இந்த நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் பங்கேற்று பி.ஆர்.நட ராஜன் எம்.பி., பேசுகையில், நடை பெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்  ஏழை மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இது கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான பட்ஜெட் என நாடாளு மன்றத்தில் எதிர்த்து பேசினோம். ஆனால், இதனை பாஜக தலைமை யிலான அரசு கண்டுகொள்ளவே இல்லை. இப்போது அனைத்து தொழில்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பணியில் உள்ள தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுக் கொண் டிருக்கிறார்கள். கடும் நெருக்கடியை இப்போது நாடு சந்தித்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்காக நாடா ளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர், தற்போது ஆறு முறை பத்திரிகையாளர்களை சந்தித்து புதிது புதிதாக பட்ஜெட்டில் திருத்தம் செய்து அறிவித்து வருகிறார்.  இருப்பினும், இந்த அறிவிப்புக ளால் மட்டும் இப்போது உள்ள நெருக்கடி தீராது என்பதை அறிந்து தான் கவனத்தை திசை திருப்ப இந்தி மொழிதான் சிறந்தது, கோவில் கட்டு வோம் என பேசி வருகிறார்கள். பாஜக வினரின் இத்தகைய பேச்சுக்களை மக்கள் புறந்தள்ள வேண்டும். நான்  எப்போதும் ஏழை பங்காளன், மக்கள் ஊழியன் என்பதை நிரூபிக்கும் வகை யில் எனது பணி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  முன்னதாக, இந்த நன்றி அறிவிப்பு பயணத்தில் பங்கேற்ற பி.ஆர்.நடரா ஜன் எம்.பி.க்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து கூறி உற்சாகமுடன் வரவேற்றதுடன், தங்க ளின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.