கோவை, செப். 24 – அநியாய சொத்துவரி உயர்வு, தனி யாரிடம் குடிநீர் விநியோகம் உரிமை அளித்தை கண்டித்து கோவை மாநகரில் செப்.27 நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக்கிடுமாறு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆட்சி யாளர்களின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தொழில் நகரமான கோவை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடல், வேலையிழப்பு, வேலையின்மை ஆகியவற்றின் காரண மாக வாங்கும் சக்தி இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக கட்டி டங்களுக்கு 100 முதல் 200 சதவிகிதமான வரியை அநியாயமாக உயர்த்தியுள்ளது. கோவை மாநகரத்தின் வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு இவ் வளவு அதிகமாக சொத்து வரி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மக்களின் வாழ்நிலை உணராத அதிகாரிகள் தங்களது இஷ்டத் திற்கு வரியை உயர்த்தியுள்ளனர். இது அநி யாய வரி உயர்வு, இதனை குறைக்க வேண் டும் என அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, தொழில் அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் என அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல், உலகின் இரண்டாவது சுவை மிக்க குடிநீர் என உணரப்படுகிற சிறுவாணி குடிநீர். ஒரு சொட்டு தண்ணீ ரைக்கூட யாராலும் உற்பத்தி செய்ய முடி யாத நிலையில் தண்ணீரைக்கூட வணிக நோக்கில் தனியார்மயப்படுத்தும் நடவ டிக்கையை கோவை மாநகராட்சி மேற் கொண்டுள்ளது. எந்த தொழில்நுட்ப வசதி யும் இல்லாத காலத்திலேயே நமது குடிநீர் வடிகால் வாரியம், அதன் ஊழியர்களை கொண்டு மலையை குடைந்து, பாறையை வெட்டி பல்வேறு இன்னல்கள், உயிர்த் தியாகங்கள் செய்து கோவை மாநகரம் வரை குழாய் பதித்து நமது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளனர். இந்த கட்டமைப்பை கைப்பற்றி பிரான்ஸ் நாட் டின் சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவ னத்திற்கு நமது மக்களின் குடிநீர் விநியோக உரிமையை 26 ஆண்டுகாலத்திற்கு கோவை மாநகராட்சியால் தாரை வார்க் கப்படுகிறது. இவர்கள் தற்போது வீடு வீடாக கட்டண மீட்டர்கள் பொருத்துகிற பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால் குடிநீருக்கான கட்டண உயர்வு அதிகரிக்கும், பொதுக் குழாய்கள் அகற்றப் படும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிக ளில் தண்ணீரை சேமிக்க கூடாது என்கின்ற நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்கிற அச்சம் நிலவுகிறது. ஆனால் இதனை மாநகராட்சி இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் தண்ணீருக் காக அந்நியனிடம் கையேந்தும் நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் குடிநீர் உரிமையை பாதுகாப்பது, அநியாய சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக ளும், அனைத்து அமைப்புகளும் இணைந்து செப்.27 ஆம் தேதியன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மக்களின் மீதான நேரிடையான இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி தரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்போராட் டத்தில் தொழில் அமைப்புகள், வியாபார நிறுவனங்கள், வணிகர்கள் இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஆகவே செப்.27 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக் கிட நமது கோவை மாநகர மக்கள் ஒன்றுபட்டு நின்று ஆட்சியாளர்களுக்கு தகுந்த பாடத்தை நிருபிப்போம் என அந்த அறிக்கையில் பி.ஆர்.நடராஜன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.