tamilnadu

img

புத்தக சேமிப்பு முன்பதிவு திட்டம் துவக்கம்

ஓசூர்,செப்.2- ஒசூர் புத்தகத் திருவிழா  சிறப்பாய் நடந்து முடிந்த தற்கு உழைத்த செயல் பாட்டாளர்களுக்கு பாராட்டு விழாவும், 9வது புத்தகத் திருவிழாவிற்கான சிறப்புத் திட்டமான புத்தக சேமிப்பு முன்பதிவுத் திட்டம் துவக்க  நிகழ்வும் தலைவர் துரை  தலைமையில் நடைபெற் றது. செயலாளர் பால கிருஷ்ணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் 8 வது புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்தவை குறித்து விளக்கினார். துணைத் தலைவர் முனை வர் சேதுராமன் புதிய முயற்சி யான புத்தக சேமிப்பு முன்  பதிவு திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.பொரு ளாளர் பக்தவச்சலம் வரவு செலவு வாசித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செய லாளர் சுப்பிரமணி புத்தகத்  திருவிழா செயல்பாட்டாளர் களை பாராட்டினார். ஒரு புதிய முன்முயற்சியாக இந்த  புத்தகத் சேமிப்பு முன்பதிவு திட்டம் ஓசூரில் ஒன்பதாம் புத்தகத் திருவிழா நோக்கி  துவக்கப்பட்டிருப்பது பாராட்  டுக் குறியது. இந்த புதிய  முயற்சியை தமிழகம் முழு வதும் நடக்கும் அனைத்து புத்தக திருவிழாக்களிலும் செயல்படுத்த  வலியுறுத்து வேன் என்றார். துணைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.  நிர்வாகிகள் சிவந்தி அருணாச்சலம், அரிச்சந்திரன், சத்திய மூர்த்தி, மணிமேகலை, பாரதிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.