tamilnadu

விமான விபத்தில் உயிரிழந்த வீரர் உடல் அடக்கம்

கோவை, ஜூன் 21-  அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவை விமானப் படை வீரர் வினோத்தின் உடல் வெள்ளியன்று அடக்கம் செய்யப் பட்டது. அசாமில் இருந்து கடந்த மே 3 ஆம் தேதியன்று 13 பேருடன் புறப்பட்டு சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக போர் விமானம், அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மலைப்பகுதியில் விபத் துக்குள்ளானது. இதில் விமானத் தில் பயணித்த 13 வீரர்களும் உயிரி ழந்தனர். இவர்களில் கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்ற விமானப்படை வீரரும் ஒருவர்.  இந்நிலையில், விமான விபத் தில் உயிரிழத்த கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரனின் உடல் வெள்ளியன்று காலை சூலூர் விமானப் படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, சிங்காநல்லூரில் உள்ள வினோத் தின் இல்லத்தில் அவரது உடலை ராணுவ வீரர்கள் முறைப்படி ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர்  விமானப்படை வீரர்கள் 33 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.

;