திருப்பூர், டிச. 17 - பாரதிய ஜனதாவின் கைப்பா வையாக மாறியிருக்கும் அதிமுக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேல் குற்றஞ்சாட்டினார். திருப்பூர் காங்கேயம் கிராஸ் சிடிசி கார்னரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் செவ்வா யன்று மத்திய பாரதிய ஜனதா அர சின் குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை எதிர்த்து கண்டன இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் அ.ஷகிலா தலைமை வகித் தார். இதில் பங்கேற்று உரையாற் றிய கே.தங்கவேல் கூறியதாவது: மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நாசகர மான காரியங்களைச் செய்து வரு கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத் திற்கு 370 சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவை ரத்து செய்ததுஅப்பட்ட மான ஜனநாயக விரோத செய லாகும். கடந்த நான்கு மாத கால மாக அங்கு இணையதளம், செல் போன்களை முடக்கி வைத்து திறந்தவெளி சிறைச்சாலையாக அந்த மக்களை வதைத்து வருகிறது. அதேபோல் அயோத்தி தீர்ப்பி லும் நீதி வழங்கப்படவில்லை. பாபர் மசூதியில் 1949ஆம் ஆண்டு சிலை வைத்தது தவறு, 1992ஆம் ஆண்டு மசூதியை இடித்தது தவறு என அடுத்தடுத்து இந்துத்துவ மத வெறியர்களின் செயலை விமர் சித்துவிட்டு கடைசியில் தவறி ழைத்த மதவெறி சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு என்று சொல்லி அஸ் ஸாம் மாநிலத்தில் 19 லட்சம் பேரை குடியுரிமை அற்றவர்களாக, அகதி களாக மாற்றியுள்ளனர். அடுத்த படியாக குடியுரிமைத் திருத்தச் சட் டத்தைக் கொண்டு வந்து நாட்டை மதஅடிப்படையில் பிளவுபடுத்தும் காரியத்தை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இலங் கையில் இருந்து தப்பி வந்து தஞ்ச மடைந்த தமிழ் மக்களுக்கு குடியு ரிமை வழங்குவது பற்றி இந்த சட் டத்தில் இடமளிக்கவில்லை. ஆனால் இந்த சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்து வாக்களித்துள்ளது. ஊழல் வழக்குகளில் சிக்கியிருப் பதால், மத்திய அரசின் மிரட்டலுக் குப் பயந்து, பாஜகவின் கைப்பாவை யாக அதிமுக செயல்படுகிறது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு அதி முக துரோகம் இழைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகத்தையும், மதசார்பின்மையையும் சீர்குலைக் கும் அடுத்தடுத்த செயல்களை பாஜக அரசு செயல்படுத்தி மக்களை திசை திருப்பி வருகிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி, தொழில் நலிவு, வேலையில்லா திண்டாட் டம் என நாட்டு மக்கள் கடும் நெருக் கடியில் சிக்கியிருக்கும் நிலையில், உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மதரீதியான விசயங்களில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு கே.தங்கவேல் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி யின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப் பினர் வழக்கறிஞர் வை.ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினர். கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜ கோபால், சி.மூர்த்தி உள்பட கட்சி அணியினர் பெருந்திரளானோர் இந்த கண்டன இயக்கத்தில் பங் கேற்றனர்.