பென்னாகரம், மார்ச் 4- ஏரியூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 786மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிவழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட பால்வளத்துறை தலைவர் டி.ஆர்.அன்பழகன் விலையில்லா மிதிவண்டி களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி மற்றும் ஏரியூர் ஒன்றிய துணைத்தலைவர் தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.