tamilnadu

img

இலவச மனைப்பட்டா ரத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பயனாளிகள்

தருமபுரி, பிப்.14- ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங் கப்பட்ட இலவச மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வெள்ளியன்று பாதிக்கப்பட்ட பயனாளிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர்.  தருமபுரி நகராட்சிக்குட்பட்ட கோல்டன் தெருவில் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர்.1995 ஆம் ஆண்டு இப்பகுதியில் வசித்து வந்த 181 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டாவுக்கான இடம் அளந்து கொடுக்கப்படவில்லை. இதையடுத்து பட்டாவுக்கான இடத்தை அளந்துகொடுக்க வலி யுறுத்தி பயனாளிகள் 2015ஆம்  ஆண்டு மனு அளித்தனர். இதன் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் பிப்ரவரி 7ஆம்  தேதியன்று மாவட்ட ஆதிதிரா விடர் நலத்துறை அலுவலரால் 181  பேருக்கான பட்டாவை ரத்து செய்வ தாக கிராம நிர்வாக அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இது குறித்து பயனாளிகளுக்கு எந்த அறிவிப்பும், தகவலும் வழங்காமல் ரத்து செய்துள்ளனர். இதையறிந்த பயனாளிகள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்தும், மனைப்பட்டாவுக்கான இடத்தை அளந்து வழங்க வேண்டு மென கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந் தனர்.  இதன்பின் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பயனாளி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். இப்பேச்சுவார்த்தையில் பட்டாவுக்கான இடத்தை அளந்து வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகையில் ஈடுப் பட்டவர்கள் கலைந்து சென்றனர்.