tamilnadu

img

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, பிப்.24-  காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அரசு கலைக் கல்லூரியில் திங்களன்று நடைபெற்றது. கோவை பத்திரிகையாளர் மன்றம், அரசு கலைக்கல்லூரியின் பொது நிர்வாகத் துறை, மாநகர காவல் துறை இணைந்து நடத்திய  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு துறைத் தலை வர் சி.எஸ்தர் புவனா தலைமை தாங்கினார். கோவை பத்திரிகையா ளர் மன்றத்தின் இணை செயலர் பி.சங்கீதா முன்னிலை வகித்தார்.  இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதவி ஆணையர் எஸ்.கார்த்திகேயன் பேசுகையில், அண்மைக் காலமாக பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி செல்லும் குழந் தைகள் முதல் வயது மூத்த பெண்கள்  வரையிலும் தினசரி பல்வேறு வித மான தாக்குதலுக்குss ஆளாகி வரு கின்றனர். இதில் 18 வயதுக்கும் குறைந்த சிறுமிகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்க ளுக்கு எதிரான பாலியல் குற்றங்க ளில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்ட னைகள் நீதிமன்றத்தால் வழங்கப் பட்டு வருகின்றன. இருப்பினும், அறியாமை காரண மாக பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகி றது. ஆபத்தில் இருக்கும் பெண் களை பாதுகாப்பதற்காக காவலன்  எஸ்.ஓ.எஸ். செயலி தொடங்கப்பட் டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் இந்த  செயலியை பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். ஆபத்துக் காலங்க ளில் பேச முடியாத நிலையில் இருப்பவர்கள் இந்த செயலியில் உள்ள பொத்தானைத் தட்டினால் போதும். அதன் மூலம் நீங்கள் ஆபத் தில் இருப்பதை காவல்துறை அறிந்து கொள்ளும். பாதிப்புக்குள் ளானவருக்கு அதிகபட்சம் 5 நிமி டங்களுக்குள் பாதுகாப்பு, உதவி கிடைக்கப்பட்டு விடும். இந்த செயலியை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பதிவி றக்கம் செய்து வைத்துக் கொண்டு  தேவைப்படும்போது பயன்படுத்த லாம். அத்துடன், வேலைக்குச் செல்லும் மகளிர், வீட்டில் தனியாக  இருக்கும் பெண்கள், முதியோர்கள் என அனைவரும் இதை பயன் படுத்தி காவல் துறையின் உத வியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.  இந்நிகழ்ச்சியில், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் ஆய்வாளர் சக் திவேல், உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், சரண்யா, உதவிப் பேராசிரி யர்கள் ஏ.பி.கே.நெடுஞ்செழியன், பி.மகுடபதி, எஸ்.சுந்தரராஜன், எஸ்.காசிம் நஷீர், ஆர்.அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடி வில் மாணவி என்.வித்யா நன்றி கூறினார்.