அவிநாசி, மார்ச் 18- அவிநாசி பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகள் புதனன்று விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்ட னர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக, 8 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வைரஸ் பர வாமல் இருக்க பள்ளிக்கூடங்கள், பல்பொருள் அங்காடி போன்றவைகளுக்கு மார்ச்31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசியல் கட்சியினரும் தங்களது பல்வேறு நிகழ்ச்சிகளையும், போராட்டங்களை யும் ஒத்தி வைத்தனர். இதன் ஒரு பகுதியாக அவிநாசி பேரூ ராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்கள், மளிகைக்கடை போன்ற இடங்களில் ஆய்வு செய்து வைரஸ் பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். இதில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய லலி தாம்பிகை, பேரூராட்சி அதிகாரி கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதே போன்று நீதிமன்ற வளாகத்தில் அரசு பொது மருத்துவத் துறையினர் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.