tamilnadu

அவிநாசி முக்கிய செய்திகள்

கருவலுார் வாரச்சந்தை ஏலம்

அவிநாசி, ஜூன் 8– அவிநாசி அருகேயுள்ள கருவலூர் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு, கருவ லூரில் வாரச்சந்தை செயல்படுகிறது. இங்குள்ள கடைகள்,  வாரச்சந்தையை பராமரிக்கும் பொறுப்பு ஆண்டுக்கு ஒரு முறை குத்தகைக்கு விடப்படுகிறது.  கடந்த ஏப்ரல் மாதமே கடந்த குத்தகைதாரருக்கான உரிம காலம் முடிந்து விட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பால் வாரச்சந்தை ஏலம் நடத்தப்படவில்லை. சில நிபந்த னைக்குட்பட்டு, பழைய குத்தகைதாரருக்கே, குத்தகை உரிமம் நீட்டித்துக் கொடுக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதியுடன் நீட்டிக்கப் பட்ட குத்தகைக்கான உரிம காலமும் முடிந்துவிட்ட நிலையில் வெள்ளியன்று ஏலம் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வாணிஸ்ரீ ஆகியோர் முன்னி லையில் நடந்தஇந்த ஏலத்தில் கடந்தாண்டு ஏலம்  எடுத்த குத்தகைதாரர் ராதாமணி என்பவரே 90 ஆயிரம் ரூபாய்க்கு இம்முறையும் ஏலம் எடுத்தார். கடந்தாண்டு  ஏலத்தை விட இது 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவூரில் சாலை விபத்தில் ஒருவர் பலி

அவிநாசி, ஜூன் 8-  சேவூர் அருகே இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளான தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவிநாசியை அடுத்த பாப்பாங்குளம் ஊராட்சி பஞ்சலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (55) இறைச்சிக் கடை நடத்தி வரும் இவர் வெள்ளியன்று சேவூரி லிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சேவூர் அருகே சந்தையப் பாளையம் பிரிவு  அருகே வந்த போது, நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த நடராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நடராஜின்  உடல் பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து  சேவூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.