அவிநாசி, நவ.18- அவிநாசி முத்தம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி நந்தினி (34). இவர் தனது மகன் ஹரி பிரசாத் (7), மகள் கோதை (2) ஆகியோருடன் ஞாயிறன்று இரவு 7 மணி அளவில் சேவூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே அவிநாசி நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதி விட்டு, சாலையோரம் இருந்த மின்கம்பத் தின் மீது மோதி நின்றது. இதில் படுகாயம டைந்த தாய் மற்றும் குழந்தைகளை அருகிலிருந்தவர்கள் மீட்டு அவிநாசி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர். இதற்கிடையில் விபத்து ஏற் படுத்திய கார் ஓட்டுநர் தலைமறைவானார். இவ்விபத்து குறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.