தனியார் நூற்பாலை மேலாளர் கொலை- ஒருவர் கைது
அவினாசி, ஜூலை 19- அவிநாசி அடுத்த கந்தம்பாளையத்தில் தனியார் நூற்பாலையின் மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே ஆலையில் பணியாற்றி வந்த சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், வடுகம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் அவிநாசியை அடுத்த செம்பியநல்லூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புதனன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கந்தம்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் கணபதியை வழிமறித்து சரமாரி யாக கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். இவரின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், கண பதியைமீட்டு அவிநாசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணபதி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர் பாக அவிநாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கணபதியை கொலை செய்தது அவருடன் பணியாற்றி வந்த ராபின் ரவிக்குமார் என்பது தெரியவந்து அவரை வெள்ளியன்று கைது செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், கணபதி தனியார் நூற் பாலையில் உற்பத்தி மேலாளராக பணி செய்து வந்துள்ளார். அதே நூற்பாலையில் ராபின் ரவிக் குமார் என்பவர் சூப்பர் வைசராக பணி செய்து வந்துள்ளார். இருவருக்குமிடையே பதவி உயர்வு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப் போது வாக்குவாதங்கள் நடைபெற்று வந் துள்ளது. ஒருகட்டத்தில் ராபின் ரவிக்குமார் பணி யிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து புதனன்று இரவு கணபதி வீடு திரும்பிய போது கந்தம்பாளையம் டாஸ்மார்க் கடை அருகில் ராபின் ரவிக்குமார் கணபதியை வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். விசாரணையில் இது தெரியவந்த நிலையில் வெள்ளியன்று ராபின் ரவிக்குமாரை கைது செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி
வேளாண்மை இயக்குநர் கூட்டத்தில் தீர்மானம்
தாராபுரம், ஜூலை 19 - தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் கூட்டத்தில் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் சங்க இயக்குநர்கள் கூட்டம் தலைவர் காமராஜ் தலை மையில் நடைபெற்றது. நிர்வாக இயக்குநர் முத்து பாரதி, துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க வளர்ச் சிக்காக மளிகை பொருட்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை இணைப்பதிவாளர் அனுமதியுடன் கொள்முதல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் கடந்தாண்டுகளில் சங்கத்தின் மூலம் கொப்பரை கொள்முதல் சிறப்பாக மேற்கொள் ளப்பட்டது. தாராபுரம் பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகமாக உள்ளனர். தென்னை விவசாயிகள் கொப்பரையை வெள்ளகோவில், காங்கேயம் பகுதியில் உள்ள மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு கொண்டு செல்வதால் கூடுதல் செலவும், நேரமும் விரயமாகிறது. எனவே தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் கடந்தாண்டு போலவே இந்தாண்டும் கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இயக்குநர்கள் மகேஷ்குமார், வளர்மதி சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண் டனர்.