tamilnadu

திருப்பூரில் முறைகேடாக பட்டா வழங்க முயற்சி

முதலிபாளையம் அரசியல் கட்சியினர் புகார்

திருப்பூர், பிப். 24 – திருப்பூர் மாவட்டம், முதலி பாளையம் ஊராட்சியில் முறை கேடாக சிலருக்கு பட்டா வழங்க முயற்சி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துமாறு அந்த ஊராட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக முதலிபாளை யம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும், திமுகவைச்  சேர்ந்த வருமான பி.விஸ்வலிங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.மகேஷ் ஆகியோர் கையெழுத்திட்டு திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் முதலி பாளையம் ஊராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் நாள் முதலமைச்சர் பேரிடர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் வீட்டுமனைப் பட்டா கோரிக்கை உள்பட பல்வேறு மனுக்கள் அளிக் கப்பட்டன. குறிப்பாக இந்த ஊராட்சியில் பல வருடங்களாக ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பங் களாகவும், தனியாக வாடகை வீடுகளிலும் வசித்து வரும் மக்கள் 450க் கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி விண்ணப்பம் செய்தனர்.

இம்மனுக்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து தகுதியான 250க்கும் மேற்பட் டோரின் பட்டியலை திருப்பூர் தெற்கு வட்டாட்சியருக்கு பரிந் துரை செய்தார். இந்த தகுதிப் பட்டி யலில் முதற்கட்டமாக 65 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க முடிவு செய்து அ.பெரியபாளையத்தில் 15 நபர்களுக்கும், பொன்னாபுரத் தில் 20 பேருக்கும், கரியாம்பாளை யத்தில் 30 பேருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடுகள் நடை பெற்றன. ஆனால் தற்போது, முதல்வர் பேரிடர் சிறப்பு முகா மில் மனுக்கொடுக்காத, முதலி பாளையம் ஊராட்சியிலேயே குடி யிருக்காத வேறு நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக தகவல் வந் துள்ளது. குறிப்பாக வருவாய்த் துறையைச் சேர்ந்த ஒரு சிலர் தனிநபர் மூலம் பணம் பெற்றுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட் டுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. எனவே இது குறித்து உரிய முறையில் விசா ரணை மேற்கொண்டு தவறு செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடையோ ருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.