tamilnadu

ஒரேநாளில் 4 இடத்தில் கொள்ளை முயற்சி பொதுமக்கள் அச்சம்

கோவை, ஆக. 8-  கோவையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு இடங் களில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், இருகூர் ஏ.ஜி. புதூர் அருகே உள்ள புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி சிலர் உள்ளே குதித்துள்ளனர்.

அப்போது பொதுமக் கள் நடமாடும் சத்தம் கேட்டதால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்பு சிங்காநல்லூர் பகுதியில் கோத்தாரி நகரில் ஒருவரது வீட்டில் கதவை உடைக்க முற்பட்டபோது பொது மக்கள் சத்தம் கேட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.  இதேபோல் சிங்காநல்லூர் கதிரவன் கார்டன் பகுதியி லுள்ள ஒருவரது வீட்டில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வர முயன்றபோது பொதுமக்கள் வந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதைத் தொடர்ந்து சுருதி என்கிளேவ் அருகே உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முற்பட்டனர்.

வீட்டிலுள்ளோர் கூச்சலி டவே கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர் களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

;