tamilnadu

பழமையான ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி - வருவாய்த் துறை புகார்

பொள்ளாச்சி, அக்.26- பொள்ளாச்சி அருகே பழமையான ஆல மரத்தினை வெட்டிக் கடத்த முயற்சித்த நபர் கள் மீது வருவாய்த் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பாலமநல்லூர் கிராமத்தில் 70 ஆண் டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இதனை மர்ம நபர்கள் வெட்ட வருவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாத னுக்கு அந்த கிராம மக்கள் தகவல் அளித்த னர். இதனைத்தொடர்ந்து சார் ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வட்டாட் சியர் தனிகைவேல் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவாய்த் துறையி னர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த காஜா உள்ளிட்ட பலர் ஆலமரத்தை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைத்தொ டர்ந்து அவர்கள் அனைவரும் சிறைபிடிக் கப்பட்டு, மரம் வெட்ட பயன்படுத்திய கருவி கள் பறிமுதல் செய்யப்பபட்டன. மேலும், 70 ஆண்டுகள் பழமையான ஆலமரத் தினை அனுமதியின்றி வெட்டியவர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் வரு வாய்த் துறையினர் புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூர் காவல் துறையினர் பிடி பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.