tamilnadu

img

பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தில் சங்ககால நெடுங்கல் கல்வட்டத்துடன் கண்டுபிடிப்பு

 கோவை மாவட்டம், பொள் ளாச்சி வட்டத்தில் கோவை செல்லும் பிரதான சாலையில் பொள்ளாச்சியில் இருந்து 5 கி.மீ  தொலைவில் ஆச்சிப்பட்டி பிரிவி லிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில்  குரும்பபாளையம் கிராமம் உள்ளது.  இங்கு சங்க காலத்தைச் சேர்ந்த  நெடுங்கல் ஒன்று கல் வட்டத்துடன்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருப்பூரில் இயங்கி  வரும் வீரராசேந்திரன் தொல்லியல்  மற்றும் வரலாற்று ஆய்வு மையத் தை சேர்ந்த மோ.சந்திரன், ரா. குமரவேல், ந.சுதாகர், க.பொன்னுச் சாமி, சு.வேலுச்சாமி மற்றும் முனைவர் சா.மு.ரமேஷ்குமார் ஆகி யோர் இந்த கள ஆய்வை மேற் கொண்டனர். இதைப் பற்றி ஆய்வு  மையத்தின் இயக்குனர் பொறி யாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறி யதாவது:  குரும்பபாளையத்தில் கிடைத் துள்ள நெடுங்கல்  14 அடி உயரமும்,  அதன் கீழ்ப்பகுதி 4 அடி அகலமும்  கொண்டதாகும். இந்த நெடுங் கல்லுக்கு முன்பாக 20 அடிச் சுற்ற ளவும் 55 செ.மீ உயரமும் கொண்ட ஒரு கல் வட்டமும் காணப்படுகிறது. இந்த நெடுங்கல்லும், கல் வட்டமும் பண்டைய காலத்தில் அங்கு வாழ்ந்த இனக் குழுவின் தலைவனுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  பெருங்கற்காலத்தில் தான் (கி.மு.1000 முதல் கி.பி. 100 வரை) மக்கள் தம் குடியிருப்புகளுக்கு வெளியே சற்றுத் தொலைவில் தனி யாக வேளாண்மை மற்றும் குடியி ருப்புக்கு பயன்படாத ஓர் இடத்தை  தேர்ந்தெடுத்து அங்கு இறந்த வர்களை அடக்கம் செய்யும் முறையை மேற்கொண்டனர். இவர்கள் இறந்தவர்களைப் புதைப் பதற்குப் பெருங்கற்களைப் பயன் படுத்திக் கல்லறைகளை ஏற்படுத்தி யதால் இக்காலம் பெருங்கற்காலம் என்றே அழைக்கப்படுகிறது. இப் பண்பாட்டுக் காலத்திற்குரிய சில  சிறப்பம்சங்கள் சங்க இலக்கியங் களில் விரவிக் கிடக்கின்றன. எனவே இதன் இறுதிக் காலம் சங்க காலத்தோடு  தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் ஒரு  இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளைக் கவர்வதற்கா கவும், தங்கள் இனக்குழு மக்கள்  வாழும் நிலப்பரப்பை விரிவு படுத்தவும், மற்றொரு இனக்குழு கூட்டத்தின் மீது தங்கள் மேலாண் மையை நிலைநாட்டவும் அடிக்கடி  போர் தொடுத்தனர். இத்தகையப் போரில் மரணம் எய்திய வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடை யாளம் ஆகவும் சுமார் 10 முதல் 15 டன் எடை கொண்ட கற்களைப் பயன்படுத்தி பெருங்கற்படைச் சின்னங்களை உருவாக்கி உள் ளனர். இப்பணியில் ஒரு சமுதாயமே  முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அகநானூறு குறிப்பிடும் (269)  “ நட்டபோலும் நடாஅ நெடுங்கல்”  என்பது இதையே குறித்து நின்றது.  “வில் இட வீழ்ந்தோர் பதுக்கை”  (157) என்ற சொற்றொடர் தெளி வாக இறந்துபட்ட வீரர்களுக்குப் பதுக்கை எழுப்பப்பட்டதைக் காட்டு கின்றன. இதன் மூலம் தம் இனக் குழுவிற்காக இன்னுயிர் ஈந்த  மாவீரர்களின் மீது பண்டைய மக்கள் மிகுந்த அன்பும், மரியா தையும் வைத்திருந்ததை அறிய முடிகிறது. குரும்பபாளையம் நெடுங்கல்லும் அத்தகைய அடை யாளத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இங்கு கிடைக்கும் கருப்பு சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் மூலம் குரும்பபாளையம் கிராமம் 2300 ஆண்டுகளாக மக்களின் வாழ்விடமாகத் திகழ் வதை அறிய முடிகிறது  என்று தெரி வித்தார்.