tamilnadu

img

அன்னூரில் அசோக் நினைவேந்தல்

அன்னூர், ஜூலை 8- அன்னூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அசோக் நினைவேந்தல், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் ஒட்டர்பாளையம், அள்ளிக்கரம்பாளையம், இந்திரா நகர், ஏஎம்காலனி, அன்னூர் மேட்டுப்பாளையம், கூத்தாண்ட வர் கோயில் வீதி மற்றும் உப்புதோட்டம் ஆகிய பகுதி களில் சாதிவெறியால் கொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொரு ளாளர் தோழர் அசோக் நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மதவெறியை மாய்ப்போம், மனித நேயத்தை காப்போம் என்று உறுதிமொழி ஏற்கப் பட்டது. இதில் ஒன்றிய தலைவர் சரவணன், செயலாளர் அர்ஜுன், பொருளாளர் ரமேஷ் மற்றும் ஒன்றிய நிர்வா கிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தோழர் அசோக் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.