குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு- 25 காவலர்கள் தனிமைப்படுத்தல்
சேலம், மே 29- சேலத்தில் இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதை யடுத்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்தோர் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட னர். தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தற் போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கடந்த சில தினங் களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே காசி என்ற கொடூரன் பல பெண்கள் பாலியல் வல்லறவு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொடூரம் அதிர்ச்சி அடங்கு வதற்குள் சேலத்தில் ஒரு கும்பல் அதேபோன்று இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அதனை கொண்டு மிரட்டி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு, சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு பகுதியை சேர்ந்த லோக நாதன், அஜய் (எ) பிரதீப், கிருஷ் ணன் (எ) சிவா. இவர்கள் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண்கள் இருவர் புகார் அளித்த னர். இந்த புகாரின் அடிப்படை யில் மூவரும் கைது செய்யப்பட்ட னர். இதையடுத்து அவர்களி டம் விசாரணை மேற்கொள்ளப் பட்டதில் மேலும் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி யடைந்த நிலையில் அவர்களை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மேற்குறிப் பிட்ட மூவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து கொரோனா பாதிப்புள் ளான நபரை சேலம் அரசு மருத்துவ மனைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதே போல், சேலம் மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய பணி யாற்றும் காவலர்கள் உட் பட 25 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.