சேலம், ஜூலை 16- இளம்பிள்ளை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே இடங்கண சாலை பேரூராட்சி, சின் னப்பம்பட்டி சாலை மோட் டூர் புவனகணபதி கோயில் பகுதியில் இரண்டு டாஸ் மாக் கடைகளும், அதன் அருகே உள்ள பாப்பாபட்டி பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகின்றனர். இந்த மூன்று கடைகளும் அடுத்த டுத்து மிக அருகாமையில் இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்ல முடியாத அளவிற்கு எந்நேரமும் நெரிசல் இருந்து வருகின்றன. மேலும், பேருந்து நிறுத்தம் அங்கன்வாடி, வங்கிகள் கோவில்கள் குடியிருப்பு பகுதியில் மிக அருகாமையிலும் இந்த மதுக்கடை உள்ள தால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களும், தொடர்ச்சியான கோரிக்கைகளும் வைத்து வந்தனர். அதன் விளைவாக புவனகணபதி கோயில் அருகே உள்ள கடையினை பாப்பாபட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏற்கனவே எங்கள் பகுதியில் உள்ள மது கடையால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எங்கள் பகுதியில் இன் னொரு கடை வைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கண்டனம் தெரிவித்து இளம்பிள்ளை- சின்னப்பம்பட்டி சாலையில் பாப்பாபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மகுடன்சாவடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர்.