tamilnadu

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அன்னூர் மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

அன்னூர், நவ. 23- அன்னூர் பகுதியில் போக்கு வரத்து நெரிசலுக்குத் தீர்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னூர் பேரூராட்சிக்குட் பட்ட பகுதியில் பேருந்து நிலை யம், காய்கறி மார்க்கெட், கடை வீதி, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் ஏராளமானவை அமைந்துள்ளன. தற்போது  மக்கள் தொகை பெருகத்திற்கேற்ப  வாகனங்களும் அதிகரித்துள்ளன. அதேநேரம், வளரச்சிக்கேற்ப  சாலைகள் அகலப்படுத்தப்பட வில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளே இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இப்பகுதி மக்கள் வேலை கார ணமாகவும், உயர்கல்விற்காகவும் நாள்தோறும் அன்னூரிலிருந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளை யம், நீலகிரி, சத்தியமங்கலம் போன்ற நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.  இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வருகிறது. மேலும், திருமணம் உள்ளிட்ட விசேச காலங்களில் அன்னூரைக் கடந்த செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலா கும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளிக் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இப்பகுதியில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.