கோவை, ஆக.23- மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப் பெண் சான்றிதழ் பெற ரூ.600 செலுத் தாத மாணவிக்கு வழக்கறிஞர் நோட் டீஸ் அனுப்பிய தனியார் பள்ளி நிர் வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கோவை மாவட்ட்டம், இடையர் பாளையம் அடுத்த டி.வி.எஸ். நகர் பகு தியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயது மகள் அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ண மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பத் தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இத னையடுத்து, வேறொரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர்ப்பவதற்காக மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான் றிதழ் பள்ளியில் கேட்டுள்ளனர். அப் போது, மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் தருவதற்கு ரூ.600 செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு கண்ணன் ஏன், எதற்கு, ரசீது தரு வீர்களா என கேள்வி கேட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதலின் நகலை மட்டும் வழங்கி யுள்ளனர். இதனையடுத்து, அவரது மகள் வேறு ஒரு பள்ளியில் தற்போது 11 ஆம் வகுப்பு சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே படித்த பள்ளி யிலிருந்து கண்ணனுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், பள்ளி யைப் பற்றி அவதூறாக பேசியதா கவும், நிலுவையில் உள்ள கல்வி கட் டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், பள்ளியை பற்றி அவதூறாக பேசியதற்கு ஏன் வழக்கு தொடரக்கூடாது என அதில் கேட்டிருந்தனர். இதற்கு கண்ணன் அவரது வழக்க றிஞர் மூலம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய ரூ.600 காசோலை கொடுத் துள்ளார். எனினும், இதுவரை மாண விக்கு அசல் மதிப்பெண் சான்றி தழ் இதுவரை வழங்காமல் அலைக் கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், மகளுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கண் ணன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந் துள்ளனர். இது குறித்து கண்ணன் கூறியதா வது, மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப் பெண் சான்றிதழ் வழங்க பணம் கேட்கப்பட்டது. இது பற்றி குறித்து கேள்வி எழுப்பியதால் எனது மக ளுக்கு வழக்கறிஞர் மூலம் நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்க றிஞர் நோட்டீஸ் அனுப்பியதால் மகள் மற்றும் குடும்பத்தினர் அனை வரும் கடும் மன உளைச்சலில் உள்ளனர். உடனடியாக அரசு நிர்வா கம் தலையிட்டு எங்களுடைய மகளின் மதிப்பெண் அசல் மதிப்பெண் சான்றிதழை வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே, இது குறித்து பள்ளி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டனர்.