tamilnadu

img

சீர்மிகு நகர திட்டம் வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சியில் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

திருப்பூர், ஆக. 19 – திருப்பூர் மாநகரத்தில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் செயல்படுத்தும் பணிகள் குறித்து  உடனடியாக வெள்ளை அறிக்கை  வெளியிடுவதுடன், அனைத்து  அரசியல் கட்சிகள் கலந்தாலோ சனைக் கூட்டத்தைக் கூட்ட வேண் டும் என்று அனைத்து கட்சிகள் மாநகராட்சி நிர்வாகத்தை வலி யுறுத்தி உள்ளன. திங்களன்று திமுக மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டிஜெயபால், வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் எம்.ரவி, பி.ஆர்.நடராஜன் மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன், மனோகரன், காங் கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், வி.ஆர்.ஈஸ்வரன், முஸ்லீம் லீக் நிர்வாகி சையது முஸ்தபா, கொமதேக மாவட்டத் தலைவர் ரோபோ ரவிச்சந்திரன், தம்பி வெங்கடாசலம் உள்ளிட் டோர் மாநகராட்சி அலுவலகத் தில் உதவி ஆணையர் சந்தான நாராயணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுக்களில் கூறப்பட்டுள் ளதாவது, சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்படி திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் உள்ள பள்ளிக்கூட கட்டிடங்கள், பொது பயன்பாட்டுக் கட்டிடங் கள், குடிநீர் தொட்டிகள், குடியி ருப்புகள் ஆகியவற்றை இடித்து விட்டு வணிக வளாகங்கள், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பூங்கா போன்றவற்றை நிறுவும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரி கிறது. தற்போதுள்ள நிலையில் இந்நகரில் முக்கிய சாலைகளில் மிகப்பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத னால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் புதிய  வணிக வளாகங்கள், பல அடுக்கு  வாகன நிறுத்துமிடம் போன்ற வற்றை அமைத்தால் திருப்பூர் நகரின் மையப்பகுதி போக்குவ ரத்து நெருக்கடியில் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் திருப்பூர்  மாநகரத்தை மேம்படுத்துவதற் கான வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது சரியல்ல. இதில்  பல்வேறு தவறுகளும், முறைகேடு களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சீர்மிகு நகரத்திற்கான திட்டங்கள் என்னென்ன? இதில் நடைபெறவுள்ள கட்டுமானங்கள் எவை, எவை? என்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக் கையை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட வேண்டும். இது குறித்து விவாதித்து முடிவு செய்ய நாடாளு மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத் துக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கொண்ட கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் எடுக்கும் முடிவு கள் அடிப்படையில் சீர்மிகு நகரம் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இக்கூட்டத்தை உடன டியாகக் கூட்ட வேண்டும். அது வரை முத்துப்புதூர் பள்ளிக்கூடம் அகற்றுவது உட்பட அனைத்து நட வடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் கேட் டுக் கொண்டுள்ளனர்.

வரி உயர்வு ரத்து கோரிக்கை

அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு இறுதியில் ஆயிரக்கணக் கான கட்டிடங்களுக்கு சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. குறிப்பாக ரூ.452 ஆக இருந்த  சொத்து வரி 1570 சதவிகிதம் அதி கரிக்கப்பட்டு ரூ.70 ஆயிரத்து 874 செலுத்த வேண்டும் என கோரப் பட்டது. இது குறித்து ஏற்கெனவே அரசியல் கட்சிகள் மாநகராட்சி உதவி ஆணையரிடம் கேள்வி எழுப்பியபோது, தவறு நடந்து விட்டது உயர்த்திய வரியை யாரும் கட்ட வேண்டியதில்லை என்றார். ஆனால் 8 மாதங்கள் கழித்து 2018 அக்டோபரில் மீண் டும் மேற்படி உயர்த்தப்பட்ட வரியை செலுத்துமாறு நிர்வாகம்  கோரியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் மீண்டும் இந்த வரியை செலுத்த வேண் டியதில்லை என உறுதியளிக்கப் பட்டது. ஆனால் தற்போது 10 மாதங்கள் கடந்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் மேற்கண்ட பல மடங்கு வரியை கட்ட வேண்டுமென மாந கராட்சி அலுவலர்கள் நிர்பந்தம் செய்கின்றனர். மேலும் காலம் தாழ்த்தாமல் உயர்த்திய வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.