tamilnadu

img

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தின் நிழற்குடையினை சீரமைத்திடுக இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்

பொள்ளாச்சி, டிச.10 - பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் சிதிலமடைந்த நிழற் குடைகளை சீரமைத்திடக் கோரி திங்களன்று இந்திய மாணவர் சங்கத் தினரால் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பழைய பேருந்து நிலையத்தின் நிழற்குடை கூரைகள் ஆங்காகங்கே சிதிலமடைந்துள்ளது.  இதனை உடன டியாக சீரமைக்கக்கோரி, இந்திய மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் சந்தியா தலைமை யில் கையெழுத்து இயக்கம் நடைபெற் றது.  பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து நூற்றுக் கணக்கான கையெழுத்துகள் பெறப் பட்டன. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்டேர் உடனிருந்தனர்.

;