சேலம், செப்.6 - தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலா ளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி சங்ககிரி கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்ககிரி, ஐவேலி, மோரூர் கிழக்கு, சன்னியாசிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். நலவாரியப் பணப் பலன்களை வழங்க வேண்டும். வேலை கேட்டு வரும் பொதுமக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சங்க கிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.துரை சாமி, மாவட்டத் தலைவர் வி.தங்கவேல், மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.கே.வெங்கடாசலம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் என்.ஜெயலட்சுமி, சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.கே.சேகர் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.