அவிநாசி, ஜூலை 28- அவிநாசி அடுத்த கருவலுரில் உள்ள வேளாண் குடியிருப்புகள் சமூக விரோத கூடமாக மாறி வருகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் வேளாண் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ள தாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ள னர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் வேளாண் குடியிருப்புகள் உள்ளது. இந்த வேளாண் குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளது. இதனால் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக மாறி உள்ளது. தற் போது இந்த வேளாண் குடியிருப்புகள் சிதிலமடைந்து வருகிறது. இதுகுறித்து வேளாண்துறை அதி காரிகள் கண்டும்காணாமல் உள்ளனர். இது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வேளாண் குடி யிருப்புகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.