100 நாள் வேலை - முதியோர் உதவித்தொகை கேட்டு
தருமபுரி, அக்.11- 100 நாள் வேலை மற்றும் முதி யோர் உதவித்தொகை வழங்கக் கோரி வெள்ளியன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், மனு அளிக்கும் போராட்டம் நடை பெற்றது. 60 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலையை 200 நாட்களாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.400 கூலி யாக வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். ஏழை விவசாய கூலி களுக்கு மனைப்பட்டா, அரசு வீடு வழங்க வேண்டும். அத்தியா வசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளியன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோவிந்த சாமி, பொருளாளர் செல்வராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் மகா லிங்கம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப் பாட்டத்தின் முடிவில் வட்டாட்சி யரிடம் கோரிக்கை மனுவை அளிக் கப்பட்டது.
சேலம்
ஓமலூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட தலைவர் எம் சின்ராஜ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் பி. அரியாக்கவுண்டர், வட்ட துணைத் தலைவர் என்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கைகளை வலியு றுத்தி ஓமலூர் காடையாம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கிருஷ்ணவேணி, கண்ணன், ஆறுமுகம், கோவிந்த ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க மாவட்ட பொரு ளாளர் அன்பழகன் துவக்கி வைத்தார். வட்டத் தலைவர் டி. ராஜா, மாரியப்பன், கே.கந்த சாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குழந்தை வேல், ஒன்றிய செயலாளர் வி.பழனிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்ககிரி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செய லாளர் டி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், சிபிஎம் வட்ட செய லாளர் எஸ்.கே.சேகர், வட்ட பொருளாளர் ஆர்.பழனிசாமி, மாதர் சங்க செயலாளர் என்.ஜெய லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பள்ளி பாளையம் தெற்கு ஒன்றிய செய லாளர் எஸ்.கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சி.துரைசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார் மாநில குழு உறுப்பினர் எஸ்.சம்பூர்ணம், சிபிஎம் நகர செயலாளர் பி. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட உதவிச் செயலாளர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். பட்டணம் பேரூர் செயலாளர் நீலா சுந்தரம் முன்னிலை வகித்தார். நாம கிரிப்பேட்டை ஒன்றிய பொரு ளாளர் இ.குப்பண்ணா மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய துணை செய லாளர் பழனிவேல் நன்றி கூறி னார். சேந்தமங்கலத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் என்.ஜோதி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி சதாசிவம் கோரிக்கையை விளக்கிப் பேசினார். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.