tamilnadu

நாமக்கல் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் ஆதார் பதிவு முகாம்

நாமக்கல், நவ.20- நாமக்கல் அஞ்சல் கோட்ட அலுவல கங்களில், ஆதார் பதிவு சிறப்பு முகாம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடை பெறுகிறது. இது குறித்து நாமக்கல் கோட்ட அஞ்ச லகக் கண்காணிப்பாளா் முருகேசன் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் வியா ழன், வெள்ளியன்று (நவ.21, 22) ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் முகாம் நடை பெறவுள்ளது. அதன்படி, மல்லசமுத்திரம், வளையப்பட்டி, பரமத்திவேலூா், சேந்தமங் கலம் துணை அஞ்சலகம், சங்ககிரி மேற்கு துணை அஞ்சலகம் மற்றும் நாமக்கல், திருச் செங்கோடு தலைமை அஞ்சலகம் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது. இதில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஏற் கெனவே பெறப்பட்ட ஆதார் அட்டைகளில் திருத்தம் செய்தல், தொலைபேசி எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி ஆகிய வற்றை சோ்த்தல் போன்ற சேவைகளை பெறலாம். புதிய ஆதார் பதிவு இலவசம்.  ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். பிற திருத்தங்களை மேற்கொள்பவா்கள் தகுந்த ஆவணங் களை கொண்டு வரவேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.