ஈரோடு, ஜூலை 24- வன உரிமைச்சட்டம் 2006ஐ திருத்தம் செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து கடம்பூர் அருகே மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசு வன உரி மைச்சட்டம் 2006ஐ திருத்தம் செய்வதை கைவிட வேண்டும். ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அரசு தொகுப்பு வீடு வழங்க வேண் டும். மலைப்பகுதியில் உள்ள அனை வருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். மலைவாழ் மக் கள் நிலத்தை வேறு தனிநபர்கள், பழங்குடியினர் அல்லாதோர் வாங் குவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக ஈரோட்டை அடுத்த கடம்பூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி.சடை யப்பன் தலைமை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். மழை வட்டார செயலாளர் ராசப்பன், மலை வாழ் இளைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சடையலிங்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலை வட்டார செயலாளர் சி.துரைசாமி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் தாயிலம்மாள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.