சத்தியமங்கலம் மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் கே.வரதராஜனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, ஏ.எம்.முனுசாமி, ஆர்.கோமதி, தாலுகா செயலாளர்கள் விஜயகுமார், கெம்புராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.