tamilnadu

img

சமாதான ஓவியம்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

வீர் பவுண்டேஷன் குரோம்பேட்டை வைணவக் கல்லூரியுடன் இணைந்து இந்திய அளவில் “சமாதான ஓவியம்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் ஆவிச்சி கல்லூரி மாணவர்கள் முதல் இடத்தையும், பல்வேறு பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய அளவில் முதல் இடத்தை மு.சுரேந்தர் கைப்பற்றி ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார். கல்லூரி அளவில் தீபன்ராஜ், ஜெகதீஸ்வரன் முறையே இரண்டு, மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். சிறப்புப் பிரிவில் நந்தகுமார், அம்ருதா, ராஜலட்சுமி ஆகியோர் முதல் இடங்களை பகிர்ந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் இ.பாபுரத்தினம் பாராட்டினார். உடன் காட்சித் தொடர்பியல் பேராசிரியர்கள், அபிநயா, பிரகாஷ், பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.