tamilnadu

img

காலமான கண்ட்ரோல்மென்ட் ஊழியருக்கு இரங்கல் கூட்டம்

கோவை, ஜன. 28- கண்ட்ரோல்மென்ட் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் பி.பர மேஸ்வரன் கோவையில் காலமானார். நீலகிரி மாவட்ட கண்ட் ்ரோல்மென்ட் ஊழியர் சங்கத்தின் துணைத் தலை வர் பி.பரமேஸ்வரன் (59) திங்களன்று உடல்நலக் குறைவால் கோவை மதுக்க ரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர்,அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவிருந்தார். இந்நிலையில் மரணமடைந்த அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அன்னாரது இறுதி நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டக் கண்ட்ரோல்மென்ட் ஊழியர் சங்கத்தின் தலைவர் பி.சி.அசோகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம், டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநில துணைத்  தலைவர் ஜெ.ஆல்தொரை, சிஐடியூ நீலகிரி மாவட்ட  தலைவர் கே.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செவ்வாயன்று செட்டிபாளையம் அருகே உள்ள மின் மயானத்தில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

;