tamilnadu

img

81 ஆதிதிராவிடர் வட்டாட்சியர் பணியிடங்களை கலைப்பதா? வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 25 - தமிழகத்தில் 81 ஆதிதிராவி டர் நலத்துறை வட்டாட்சியர் பணி யிடங்களை கலைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வருவாய்த்துறை அலுவலர் கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மக்கள் நலத்திட்டங்களை செயல்ப டுத்தும் வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும், சான்றுகளை விரைவாக வழங்கவும் உள்வட்ட அளவில் துணை வட் டாட்சியர் பணியிடத்தை ஏற்ப டுத்த வேண்டும். நீண்ட நாள் கோரிக்கைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கை யினை ஆதிதிராவிடர் நலத்துறை எடுத்து வருவதை உடனடியாகக் கைவிட வேண்டும். தேர்தல் பிரி வில் பணிபுரியும் தற்காலிக இள நிலை உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணியிடங்களை குறைக்க வழி வகுக்கும் அரசாணை எண்.56-லிருந்து வருவாய்த்துறைக்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட் டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கிளை தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ச.முருகதாஸ் கோரிக் கைகளை விளக்கி சிறப்புரையாற்றி னார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கிளை பொறுப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.