உடுமலை, அக். 22- உடுமலையில் காவல் நிலையம் அருகே சுமார் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் போதை பொருள்கள் விற்பனை செய்யப் படுவதாகப் புகார் எழுந்தது. இதனைய டுத்து உடுமலை, சங்கிலி வீதியில் கோவை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் காண்காணிப்பாளர் வின்சன்ட் தலைமை யில் காவலர்கள் செவ்வாயன்று சோதனை யில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. விசாரணையில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து உடுமலைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு, இங்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தனியார் ஆம்புலன்ஸில் சுமார் 300 கிலோ கஞ்சாவும் பிடிபட்டது. மொத்தமாக 600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட கருப்புசாமி மற்றும் அருண் (எ) அருண்குமாரை கோவை போதை தடுப்பு நூண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உடுமலை நகரில் காவல் நிலையம் அருகிலேயே 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.