tamilnadu

img

383 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை

திருப்பூர், ஆக. 23- பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 383 மெட்ரிகுலேசன் பள் ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டன.  திருப்பூர்  மாவட்டம், தாரா புரம் சாலை அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல்  கல்லூரி வளாகத்தில் வியாழ னன்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், கரூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 383 பதின்மப் பள்ளிகளுக்கு (மெட்ரிக்) தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் உடு மலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினர். இதைத்தொடரந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழகம் முழுவதும் அனைத்து வகை தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு நகர் மற்றும் ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்டகுழுமம், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் கட்டிட வரைபட அனுமதி பெற்று சமர்பிக்க வேண்டுமென்ற நிபந்த னைகளுடன் தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டு வருகி றது. தமிழகத்தில் சுமார் 2ஆயிரம் மெட்ரிக் குலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.  வரும் காலங்களில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றுவதற்கு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆணைகளை பெறுவதற்கு தங்களுக்குள்ள இடர்பாடுகளும் சரி செய்யப்படும் என்றார்.