கிருஷ்ணகிரி, செப்.9- கோவை முதல் கிருஷ்ணகிரி வரை 7 மாவட்டங்களில் 25,000 ஏக்கர் விளை நிலங்களில் பாரத் பெட்ரோலிய நிறுனம் குழாய் புதைக்கப் பட இருக்கிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் ராயக்கோட்டையில் தொடங்கி சூளகிரி, ஓசூர் வட்டம் வழியாக 8 ஊராட்சிகள், 28 கிராமங்களில் 1356 சர்வே எண்களில் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களில் சுமார் 3,000 ஏக்கர் நிலத்தின் வழியாக சென்று கர்நாடகாவின் தேவன குந்தியை அடைகிறது. விவசாய விளை நிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப். 9 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டில்லிபாபு தலைமையில் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் முனியப்பா முன்னிலையில் ஊர்வலமாக சென்று ஆட்சியர் பிரபாகரிடம் மனுகொடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்கள். விவசாயிகள் சங்க தேன்கனிக்கோட்டை வட்டச் செயலாளர் அனுமப்பா, சூளகிரி வட்டத் தலைவர் எம்எஎம்.ராஜூ, துணை தலைவர்கள் சினிவாசன், சாமனப்பள்ளி சாந்தகுமார், கோவிந்தப்பா, சீபம் ராமமூர்த்தி, சந்தி) சேகர் சீனப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.