tamilnadu

img

கோபிசெட்டிபாளையம் அருகே ஆசிரியர் தாக்கியதில் 24 மாணவ, மாணவிகள் படுகாயம்

கோபி, அக்.19- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் செயல் பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியர் தாக்கி யதில் 24 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். கண் மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் காந்தி கல்வி நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பத்தாம்  வகுப்பு பயிலும் மாணவ, மாணவி களுக்கு கணித ஆசிரியையான சிவகாமி கணித பாடத்திற்கான வகுப்பு தேர்வை நடத்தியுள் ளார். அதில் 28 மாணவ, மாணவி கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறி சனியன்று 24 மாணவ, மாணவிகளை பிரம்பு கொண்டு கண் மூடித்தனமா தாக் கியுள்ளார். அதில் கை மற்றும் கால் களில் அடிப்பட்ட தழும்புடனும் வீக்கத்துடனும் வகுப்பில் அழுது கொண்டிருந்துள்ளனர். இதன் பின் அடுத்த வகுப்பிற்கு வந்த ஆசிரியர் மாணவ, மாணவி களை பார்த்து அதிர்ச்சியடைந்து தலைமையாசிரியர் மற்றும் முதல்வரிடம் தகவல் தெரிவித்துள் ளார். முதல்வர் மற்றும் தலைமை யாசிரியரின் அறிவுரைப்படி  பாதிக்கப்பட்ட மாணவ, மாணவி களை கூகலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவ, மாணவி களுக்கு சிகிச்சை அளித்துவரு கின்றனர்.

இதனையடுத்து தகவலறிந்து மருத்துமனைக்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குழந்தைகள் படிக்கவில்லை யெனில் பெற்றோர்களிடம் தெரி விக்க வேண்டும் அதைவிட்டு பிரம்பால் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளது கண்டிக்கத் தக்கது. சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிடில் தங்களது குழந்தைகளை பள் ளிக்கு அனுப்பப்போவதில்லை  எனவும் பெற்றோர்கள் தெரி வித்துள்ளனர். மேலும், சிவகாமி ஆசிரியை மாணவ, மாணவிகளிடம் எப்பொ ழுதும் விரோத போக்கை கடைப் பிடித்து வருகிறார். இதுபோல் பல முறை மாணவ, மாணவிகளை தாக்கியுள்ளார். இது குறித்து நிர்வாகத்திற்கும், பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அளித்துள் ளோம். ஆனால் அவர் மீது எந்த வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் குறித்து கோபி செட்டிபாளையம் காவல்துறை யினர் விசாரணை மேற்கொண் டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை சிவகாமியை தொடர்பு கொள்ளமுயற்சித்தபோது அவரது தொடர்பு கிடைக்கவில்லை.