மே.பாளையம், மார்ச் 23- கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு பிர சாரம் மேற்கொண்டு வருகின்ற னர். கொரோனா தடுப்பு நடவடிக் கையாக செவ்வாயன்று மாலை முதல் மாவட்ட எல்லைகள் மூடப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தால் எல்லையில் வாகனங்கள் வரிசி கட்டி நிற்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக செவ் வாய் (இன்று) முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் வாக னங்களின் எண்ணிக்கை அதி கரிக்க துவங்கியுள்ளது. இதனால், கோவை மாவட்ட எல்லையில் மருத்துவ குழுவினர் மற்றும் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். நாளை முதல் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு அமலுக்கு வருவதாகவும், மாலை ஆறு மணிக்கு மாவட்ட எல்லைகள் மூடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அவ ரவர் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகின் றனர். அரசின் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே மாவட்ட எல்லைகளில் போக்கு வரத்து அதிகரிக்க துவங்கி விட் டது. கோவை வழியே நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல அனைத்து வாகனங்களும் மலை யடிவாரத்தில் உள்ள மேட்டுப் பாளையத்தை கடந்தே சென்றாக வேண்டும் என்பதால், இங்குள்ள மலைப்பாதையில் மருத்துவக் குழு வினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும், கோவை மாவட்ட எல்லையைக் கடந்து நீலகிரி மாவட்டத்தினுள் செல்லும் வாக னங்களின் எண்ணிக்கையும், நீலகிரியில் இருந்து கோவைக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக் கையும் அதிகரிக்க துவங்கியது. இதனால் கூடுதலாக மருத்துவ குழுக்கள் மற்றும் போலீசார் வர வழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள் ளன. வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அதில் பயணிக்கும் பயணிகளுக்கு உடற் பரிசோதனையும் நடத்தப் பட்டது. நீலகிரியைச் சொந்த மாவட்டமாகக் கொண்டவர்கள் தவிர வேறு பயணிகள் யாரும் மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. சரியான காரணங்களின்றி நீல கிரி மாவட்டத்தில் இருந்து வெளியே வருபவர்களுக்கு சூழலை விளக்கி திருப்பி அனுப் பட்டு வருகின்றனர். கடந்து செல் லும் பேருந்துகளில் ஏறி உள்ளே செல்லும் மருத்துவக்குழுவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றியும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்தும் விழிப்புணர்வு பிர சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.